2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2014இல் அசிட் வீச்சுத் தாக்குதல்; இன்று வீர நடை..

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2014ஆம் ஆண்டு, ரெஷ்மா குறேஸியின் மைத்துனனும் அவனது நண்பர்களும், அவள் முகத்தில் அசிட் வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.

ஆனால், ரெஷ்மா குறேஸி, இப்போது பிரபல மொடலாக உள்ளார்.

உலகின் மிகப் பிரபலமான பஷன் ஷோவான நியூயோர்க் பஷன் வாரத்தின் போது, மொடலாக இவர் நடந்த நிகழ்வு, உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டது.  

வித்தியாசமான மொடல் அழகிகளைப் பயன்படுத்தும் நிறுவனமான FTL Modal எனும் நிறுவனம், இவரை மொடல் அழகியாக மாற்றி இவருக்குப் புகழை ஈட்டிக்கொடுத்துள்ளது.

எனினும், இதற்கு முன்னரே இவர், றியா சர்மாவுடன் சாரி அணிந்து படமெடுத்துத் தன்னைப் பிரபலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .