2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காவலில் இருந்தவர் கொலை: பொலிஸார் ஐவரை கைது செய்ய உத்தரவு

George   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்  

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்த சந்தேகநபரை சித்திரவதைக்கு உள்ளாக்கி, கொலை செய்து, சடலத்தை இரணைமடுக் குளத்தில் போட்ட வழக்குத் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளங் காணப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு, குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்று புதன்கிழமை (21) உத்தரவிட்டார்.

மேலும், 5 சந்தேகநபர்களின் வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்து, அதனை உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .