2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் மாற்றுத்திறனாளி படுகாயம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி புளியம்பொக்கணை ஏ-35 வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த கப் ரகவாகனம் மோதியதில், முச்சக்கர வண்டியைச் செலுத்திச்சென்ற மாற்றுத்திறனாளியான சாரதி படுகாமடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று சனிக்கிழமை (24) மதியம் இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியலிருந்து பரந்தன் நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த கப்ரக வாகனம் மோதியதில் முச்சக்கர வண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது முச்சக்கர வண்டியைச் செலுத்திச்சென்ற மாற்றுத்திறனாளியான சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்

குறித்த விபத்துடன் தொடர்புபட்ட வாகனம் தப்பிச் சென்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X