2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுண்டிக்குளத்தில் கிபிர்க் குண்டு மீட்பு

Niroshini   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி – சுண்டிக்குளம் காட்டுப்பகுதியிலிருந்து நேற்று சனிக்கிழமை, கிபிர்க் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், மற்றும் விசேட அதிரடிப்படையினர், குண்டை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு,  6 அடி நீளமும் 300 கிலோ கிராம் எடை கொண்டதுமாகும் என விசேட அதிரடிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த குண்டு வெடிக்காத நிலையில் செயலிழந்துள்ளதாகவும் இதனை முற்றிலும் செயலிழக்கச் செய்யும் நோக்கில் அதிரடிப்படையினர் அதனை மீட்டுச் சென்றுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .