2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முன்னறிவித்தல் இன்றிய நீர்வெட்டால் பாவனையாளர்கள் சிரமம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூதூர் கிளையினால், கடந்த ஒரு வார காலமாக எவ்வித முன்னறிவித்தலுமின்றி நீர் வெட்டப்படுவதால் நீர் பெறுவதில் பாவனையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மூதூர் பிரஜைகள் குழுவின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கள் தெரிவித்துள்ளார்.

அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போது வரட்சியான காலப்பகுதி என்பதால் கிணறுகளில் நீர் இல்லாது காணப்படுகிறது. மூதூர் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை எவ்வித முன்னறிவித்தலுமின்றி நீரைத் தடை செய்வதால் முன் கூட்டியே நீரைச் சேமித்து வைக்க முடியாத நிலை காணப்படுகிறது.

எனவே, இனிமேல் நீர்த் தடை செய்கின்ற போது மூதூர் பிரதேசத்திலுள்ள எல்லாப் பகுதிகளுக்கும் முன்னறிவித்தலை வழங்க, மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .