2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மூன்று விபத்துக்களில் 10 பேர் காயம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன், மு.இராமச்சந்திரன்

மலையகத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற மூன்று விபத்துச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 10 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பதுளைக்கு பயணித்த வானும் பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற வானும் பதுளை நகரில்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை இரவ 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில்,  5 பெண்கள், 1 சிறுவன் உட்பட 9 பேரே படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியாவிலிருந்து  வெலிமடை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று, வெலிமடை சாப்புகடை பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டியிலிருந்து ரதெல்ல தேயிலை தொழிற்;சாலைக்கு, டொலமைட் ஏற்றிச் சென்ற லொறி, ரதெல்ல விளையாட்டு மைதானத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .