2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுற்றுலா பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை ஆரம்பம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல் வசதிகளை வழங்கும் நோக்கோடு, சுற்றுலா பொலிஸ் சைக்கிள் ரோந்து சேவை, மட்டக்களப்பு பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தினந்தோறும் பி.ப. 2.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலிருந்து பாலமீன்மடு வெளிச்ச வீடு வரை ஒரு சேவையும், இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணிவரையும் இரு ரோந்து சேவைகளும் நடாத்தப்படவுள்ளதாக தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி சி.ஐ. ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .