2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கடவுளை எங்கு பார்த்தேன்?

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தையின் மழலையினை அம்மாவினால் மட்டுமே மொழிப்பெயர்க்க முடியும். இது, இவர்களிடையேயான நெஞ்சங்களினூடாகப் புஷ்பிக்கும் புரிதலின் வெளிப்பாடாகும்.

தாயின் வாசனையை, குழந்தை புரிந்துகொள்கின்றது. அதன் ஒவ்வொரு சிணுங்களையும் இவளால் புரிந்துகொள்ள எப்படி முடிகின்றதோ? மழலையின் பசியை, தாகத்தை, எப்படி உணர்கின்றாள்?  

தாயின் மடியில் படுத்து, அறுதுயில் கொண்ட சுகானுபவத்தை, இனி எப்போது அனுபவிக்க முடியும்? அம்மா! இந்த உயிர் என்னுள் இருக்கும் வரை, கடவுளை எங்கு பார்த்தேன்? உன்னைத்தானே பார்த்தபடியே இருக்கின்றேன்...! 

 

வாழ்வியல் தரிசனம் 26/09/2016

-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X