2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 26

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1255: அசிசியின் புனித கிலாராவுக்கு, புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

1580: சேர் பிரான்சிஸ் டிரேக், உலகைச் சுற்றி வந்தார்.

1687: ஏதன்ஸ் நகரத்தை முற்றுகையிட்ட ஒட்டோமான் படையினரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற, மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில், ஏதன்ஸின் பார்த்தினன் நகரம், பகுதியளவில் அழிவடைந்தது.

1777: பிரித்தானியப் படைகள், பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.

1783: மாசசூசெட்சில் ஆயுதக் கிளர்ச்சி, ஷேய்சின் கிளர்ச்சி ஆரம்பம்.

1907: நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும், பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.

1918: முதலாம் உலகப் போர் - அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல், பிரான்சில் ஆரம்பம்.

1934: ஆர்.எம்.எசு.குயீன் மேரி நீராவிக்கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1944: இரண்டாம் உலகப் போர் - மார்கெட் கார்டன் நடவடிக்கை, தோல்வியடைந்தது.

1950: ஐ.நா படைகள், வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றின.

1950: இந்தோனீசியா, ஐ நா வில் இணைந்தது.

1954: ஜப்பானில் இடம்பெற்ற புயலில் சிக்கிய கப்பல் ஒன்று மூழ்கியதில், 1,172பேர் உயிரிழந்தனர்.

1960: ஐக்கிய அமெரிக்காவில், முதல் தடவையாக அரசுத் தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம், ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜோன் எஃப் கென்னடிக்கும் இடையில் இடம்பெற்றது.

1960: பிடெல் காஸ்ட்ரோ, சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.

1962: யேமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.

1973: அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை, கொன்கோர்ட் விமானம் பறந்து காட்டியது.

1983: அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை, ஒரு கணினித் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து, அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.

1984: ஐக்கிய இராச்சியம், ஹொங்கொங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக்கொண்டது.

1987: தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.

1997: இந்தோனேசிய விமானம், மெடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234பேர் கொல்லப்பட்டனர்.

1997: இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம், அசிசியின் பிரான்ஸ் தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.

2002: செனெகல் நாட்டு கப்பல் ஒன்று, காம்பியாவில் மூழ்கியதில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2007: வியட்நாமில், பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 60 தொழிலாளர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

2008: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி, ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .