2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிப்பு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரேன், எஸ்.கணேசன்

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை வரை எரிபொருள் தாங்கி ஏற்றிச் சென்ற புகையிரதம், இன்று செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை 3.30 க்கு, கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு  அண்மித்த பகுதியில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று காலை முதல் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொட்டகலை ரயில் நிலையப் பகுதியிலுள்ள கொட்டகலை எரிபொருள் மத்திய நிலையத்துக்கு எரிபொருள் இறக்கும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரதத்தில் 3 எரிபொருள் தாங்கிகள் இருந்த வேளையில் ஒரு என்ஜீன் உட்பட ஒரு எரிபொருள் தாங்கியும் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், புகையிரத பாதையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .