2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குரும்பசிட்டியில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் விவரம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, குரும்பசிட்டி பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள், நேற்றுத்திங்கட்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 60 ஆர்.வி.ஜி எறிகணைகள், 40 மில்லிமீற்றர் எறிகணைகள் – 66, 60 மில்லிமீற்றர் எறிகணைகள் 28, 81 மில்லிமீற்றர் எறிகணைகள் 70, டி.பி.என்.ஜி – 1600, சிக்ஸ்டி மோட்டார் பரா 4 மற்றும்ஆர்.வி.ஜி சார்ஜர் - 30 ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை (25) கிணற்றை தூர்வாறும்போதே, ஆயுதங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் உதவியுடன் குண்டுகள் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .