Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாந்தைகிழக்கு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்குமாறு பிரதேச மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாந்தை கிழக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், கடந்த திங்கட்கிழமை (26) நடைபெற்ற போது, இந்தக் கோரிக்கை விடப்பட்டது.
தற்போது பணியிலுள்ள மருத்துவர் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளதால், அந்த இடத்துக்கு விரைவில் நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும்.
மீள்குடியேற்றத்தின் பின்னர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் உருவாக்கப்படவில்லை. விடுதி வசதிகள் மருத்துவமனையில் காணப்படவில்லை. பாம்புக்கடிக்கு கூட மேலதிக சிகிச்சைக்கு செல்லவேண்டியுள்ளது. போர் காலத்தில் கூட இம்மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை வசதிகள் காணப்பட்டதாக கூறினர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதாரப் பணிப்பாளர் எஸ்.பூங்கோதை,
இந்த மருத்துவமனையின் வளப்பற்றாக்குறை கட்டங்கட்டமாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. மருத்துவமனையில் காணப்படுகின்ற மருத்துவர் உட்பட ஆளணிப் பற்றாக்குறை காரணமாகவே மருத்துவமனையின் இயங்குதிறன் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளணிகள் பற்றாக்குறை நீங்கும்போது தான் மருத்துவமனை சிறப்பாக இயங்கும்.
ஆனாலும், மக்களுக்கான சிகிச்சைகளும் மேலதிக சிகிச்சைகளுக்கான வசதிகளும் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .