2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

1000 ரூபாய் கேட்டு இ.தொ.கா. ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

 

1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி  பொகவந்தலாவை கம்பனிக்கு உட்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்  இன்றுச் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை பகுதிக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பொகவந்தலாவை நகரிலும் நோர்வூட் பிரதேச தொழிலாளர்கள் நோர்வூட் நகரிலும்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களே இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

'ஆயிரம்  ரூபாய் சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்டக் கம்பனிகள் முன்வரவேண்டும்'   'அரசாங்கம் சம்பள பேச்சுவார்த்தையில் தலையிட்டு உடனடியாக தீர்வை பெற்றுத்தர வேண்டும்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.

இதேவேளை, நோர்வூட் தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளிரடம் மகஜரொன்றை கையளித்ததுடன் எதிர்வரும் ஐந்து நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்கப்பெறாவிடின் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் சூளுரைத்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் இ.தொ.கா.வின் ஆதரவாளர்களைத் தவிர ஏனைய தொழிற்சங்கத்திலுள்ள தொழிலாளர்கள், வழமைப் போன்று வேலைக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வார்ப்பாட்டம் சுமார் 4 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .