2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மதுபானப் போத்தல்களுடன் கைதானவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சட்டவிரோதமாக 100 மதுபானப் போத்தல்களை கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 40 ஆயிரம் ரூபாயை அபராதமாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா விதித்துள்ளார்.

சட்டவிரோதமாக 100 மதுபானப் போத்தல்களை கொண்டுசென்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மட்டக்களப்பு, வவுணதீவுப் பொலிஸ் பிரிவில்; திங்கட்கிழமை (26) அதிகாலை கைதுசெய்துள்ளதுடன், அம்மதுபானப் போத்தல்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஒருதொகை மதுபானப் போத்தல்கள் வவுணதீவு ஆற்றின் ஊடாக தோணியில் கொண்டுவரப்படுவதாக தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த ஆற்றுப்பகுதிக்குச் சென்று தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மேற்படி மதுபானப் போத்தல்கள் கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரிலிருந்து இம்மதுபானப் போத்தல்கள் கொண்டுவரப்பட்டுள்ளமை விசாரணையிலிருந்து தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .