2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

போதை பொருள் விற்பனை: தகவல்கள் திரட்டப்படுகின்றன

Kogilavani   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாட்டத்தில் சட்டவிரோத போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது, கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் இவர்கள் தொடர்பிலான விபரங்களை திரட்டி வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்காக, நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் பிரிவினர்  கொட்டகலை, தலவாக்கலை, ஹட்டன்  ஆகிய நகரங்களில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை தகவல் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பிரதான நகரங்களிலுள்ள சில வியாபார நிலையங்களில், மாவா பாக்கு,  புகையிலை தூள் கலக்கப்பட்ட பீடா மற்றும் போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்தே இவ்விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .