2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காதல் முறிவு: வருத்தத்தில் வரு

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


'ஏழு வருடங்களாக இருந்த காதல் உறவை, ஒருவர் உடைத்து விட்டார்' என, நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
சினிமா வட்டாரத்தில், அடிக்கடி பேசப்பட்ட விஷால் - வரலட்சுமி காதல் விவகாரம், நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'ஏழு வருடங்களாக இருந்த எங்களுடைய காதல் உறவை, ஒருவர் உடைத்து விட்டார். அந்த செய்தியை, தன்னுடைய மேலாளர் மூலமாக சொல்லி அனுப்பியுள்ளார். உலகம் எங்கே போகிறது; காதல் எங்கே இருக்கிறது' என, டுவிட்டரில் வரலட்சுமி பதிவு செய்துள்ளார்;.

இது, விஷாலுடன் உள்ள காதல் முறிந்து விட்டதை, வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. இதுவரை விஷாலும், வரலட்சுமியும் காதலை வெளிப்படையாக கூறவில்லை; ஆனால், இருவரின் நட்பு, நெருக்கமான புகைப்படங்கள், காதலை காட்டியது. காதலன்; யார் என்பதை கூறாத வரலட்சுமி, காதல் முறிந்ததை மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X