2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கூட்டுவலைகளைப் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அரசரட்ணம்

முல்லைத்தீவு, நந்திக்கடல் நீரேரியில் தடை செய்யப்பட்ட கூட்டு வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்த 12 மீனவர்களுக்கு 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, முல்லைத்தீவு நீதவான் எஸ்.எம்.எஸ்.ஸம்சுதீன், நேற்று வியாழக்கிழமை (29) தீர்;ப்பளித்தார்.

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் புதன்கிழமை (28) நந்திக்கடல் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையில், இந்த 12 மீனவர்களும் பிடிக்கப்பட்டனர்.

மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, அவர்கள் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வலைகளை அழிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .