2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபர் கைது

George   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவிகள் 4 பேரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பண்டாரவளை எல்ல கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலையொன்றின் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.10 மற்றும் 11 வயது மாணவிகளே குறித்த அதிபரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் உள்ள புத்தர் சிலைக்கு அருகில் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வறையில் வைத்து தனித் தனியாக இந்த மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் குறித்த மாணவிகள் தெரியப்படுத்தியுள்ளனர். அதன்பின்னர், பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான குறித்த அதிபர் இதற்கு முன்னர், தமது உறவினரின் மகளை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .