2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீட்டு வளாகத்தில் அம்மன் சிலை? அகழ்வில் கிடைக்கவில்லை

George   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் எழுத்தூர் செல்வ நகர் பகுதியில் உள்ள வீட்டு வளாகத்தில் அம்மன் சிலை ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், குறித்த வீட்டின் அடையாளம் காணப்பட்ட பகுதி இன்று  (30) வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது.

எனினும், குறித்த அகழ்வின் போது, எந்த வகையிலான பொருட்களும் கண்டெடுக்கப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மன்னார் எழுத்தூர் செல்வ நகர் கிராமத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரது வீட்டு வளாகத்தில் அம்மன் சிலை ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சிலை தொடர்பாக குறித்த வீட்டு உரிமையாளருக்கு அடிக்கடி கனவு ஏற்பாடுவதாகவும், அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக தனது வீட்டில் இனம் தொரியாத நபர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் இதனால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறி குறித்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியர் கடந்த 27ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மன்னார் பொலிஸார் குறித்த முறைப்பாடு தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக குறித்த வீட்டில் அடையாளம் காணப்பட்ட பகுதியை தோண்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், குறித்த வீட்டின் அடையாளம் காணப்பட்ட பகுதி இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தோண்டப்பட்டது.

இதன் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், தடயவியல் நிபுணத்துவ பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், மற்றும் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் அடையாளம் காணப்பட்ட பகுதி சுமார் 2 மணித்தியாலங்கள் தோண்டப்பட்டது.

சுமார் 10 அடி வரை தோண்டப்பட்ட போதும் குறித்த அகழ்வின் போது அம்மன் சிலையோ அல்லது வேறு எந்த தடையப்பொருட்களோ மீட்கப்படவில்லை.

அதனையடுத்து, தோண்டும் பணி நிறுத்தப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .