2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அஞ்சல் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள 142ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள அஞ்சல் ஊக்குவிப்பு வாரத்தினையொட்டி அக்கரைப்பற்று அஞ்சல் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (01) அஞ்சல் ஊக்குவிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அஞ்சல் அதிபர் ஏ.ஏ. லெப்பை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எம். தம்பிஐயா அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

வீதி ஊர்வலமாகச் சென்று அஞ்சல் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டம் தொடர்பாக பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

அஞ்சல் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடனும், திணைக்களத்தின் சேவையை முன்னேற்றுவதற்குமான பொது மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எம். தம்பிஐயா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X