2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 14

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 13 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1066: இங்கிலாந்தில் "ஹாஸ்டிங்ஸ்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் வில்லியமின் படைகள் இரண்டாம் ஹரோல்ட் மன்னனைக் கொன்றனர்.

1322: ஸ்கொட்லாந்தின் முதலாம் ரொபேர்ட் பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வேர்ட் மன்னனைத் தோற்கடித்தான். ஸ்கொட்லாந்தின் விடுதலையை எட்வேர்ட் ஏற்றுக்கொண்டான்.

1582: கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1586: ஸ்கொட்லாந்தின் முதலாம் மேரி, இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டாள்.

1758: ஏழாண்டுப் போர் - ஆஸ்திரியா பிரஷ்யாவை வெற்றி கொண்டது.

1773: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேயிலைக் கப்பல் மேரிலாந்தில் எரிக்கப்பட்டது.

1806: முதலாம் நெப்போலியன் புரூசிய இராணுவத்தை தோற்கடித்தான்.

1888: றொஉன்தய் Gஅர்டென் ஸ்cஎனெ என்ற முதலாவது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயாரித்தார்.

1903: யாழ்ப்பாணத்தின் SS Jaffna என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணித்தது.

1912: முன்னாள் அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் விஸ்கொன்சின், மாநிலத்தின் மில்வாக்கி நகரில் வைத்து சுடப்பட்டார்.

1913: ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439பேர் கொல்லப்பட்டனர்.

1925: டமாஸ்கசில் பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரான போராட்டம் ஆரம்பமாயிற்று.

1926: சிறுவர் நூல் வின்னீ-த-பூ (Wஇன்னிஎ-தெ-Pஓக்) வெளியிடப்பட்டது.

1933: நாசி ஜெர்மனி தேசங்களின் அணியில் இருந்து விலகியது.

1939: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் "ரோயல் ஓக்" என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

1943: போலந்தில் நாசிகளின் "சோபிபோர்" வதைமுகாமில் இருந்த 600 கைதிகள் கிளர்ச்சியை மேற்கொண்டதில் 11 நாசிகள் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் அதிகமான கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.

1948: இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1956: இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.

1962: கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க ஊ௨ விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.

1964: லியோனிட் பிரெஷ்னெவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆனார். நிக்கிட்டா குருசேவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1964: ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1968: விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.

1973: தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களாட்சிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.

1987: டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்டது. இந்த மீட்புப் போராட்டம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X