2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 16

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1775: ஐக்கிய அமெரிக்காவில், மேய்ன் மாநிலத்தின் போர்ட்லண்ட் நகரம், பிரித்தானியரால் எரிக்கப்பட்டது.

1781: ஜோர்ஜ் வொஷிங்டன், வேர்ஜீனியாவின் யோர்க்டவுன் நகரைக் கைப்பற்றினார்.

1793: பிரெஞ்சுப் புரட்சி - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மரீ அண்டொனெட், கழுத்து வெட்டி மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.

1799: பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்.

1813: ஆறாவது கூட்டணி நாடுகள், நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.

1834: லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல, எரிந்து சேதமடைந்தன.

1905: ரஷ்ய இராணுவம், எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில், 94 பேர் கொல்லப்பட்டனர்.

1905: பிரித்தானிய இந்தியாவில், வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.

1923: வேர்ல்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1934: குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.

1939: இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியா மீதான ஜெர்மனிய வான்படையின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது.

1942: மும்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில், 40,000 பேர் கொல்லப்பட்டனர்.

1949: கிரேக்க கம்யூனிசத் தலைவர் நிக்கலாஸ் சக்காரியாடிஸ் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

1951: பாகிஸ்தானின் முதலாவது பிரதமர் லியாகட் அலி கான், ராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1964: மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1973: ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.

1975: கிழக்குத் திமோரில், அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் இந்தோனீசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1984: தென்னாபிரிக்காவின் டெஸ்மண்ட் டூடு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1987: தெற்கு இங்கிலாந்தில் இடம்பெற்ற சூறாவளியில், 23 பேர் கொல்லப்பட்டனர்.

1996: குவாத்தமாலாவில், கால்ப்பந்தாட்டப் போட்டி நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 84 பேர் கொல்லப்பட்டனர்.

1998: சிலியின் முன்னாள் சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினொச்சே, லண்டனில் கைது செய்யப்பட்டார்.

2003: தமிழ் விக்கிப்பீடியாவில் முதலாவது கட்டுரை சிரின் எபாடி பற்றி எழுதப்பட்டது.

2006: இலங்கை, ஹபரணையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில், 102 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

2006: 1987இல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இணைக்கப்பட்டிருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று இலங்கை உயர்நீதிமன்றம் அறிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X