2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 17

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1091: லண்டனில் பெரும் சூறாவளி இடம்பெற்றது.

1346: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட், ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து, பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.

1448: கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம், ஒட்டோமான் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1604: ஜெர்மனிய வானிலையாளர் ஜொகான்னஸ் கெப்லர், வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள விண்மீன் (எஸ்.என். 1604) தோன்றுவதைக் கண்டார்.

1610: பதின்மூன்றாம் லூயி, பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.

1660: இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.

1662: இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ், டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.

1800: டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ, இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது.

1805: நெப்போலியனின் போர்கள் - ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர், நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.

1806: எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக், படுகொலை செய்யப்பட்டான்.

1907: மார்க்கோனி, அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.

1912: முதலாம் பால்க்கன் போர் - பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.

1917: முதலாம் உலகப் போரில் ஜெர்மனி, பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.

1933: அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாசி, ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.

1941: இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல், அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.

1961: பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1965: 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.

1966: நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில், 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.

1979: அன்னை தெரேசா, அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

1995: யாழ்ப்பாணத்தை, விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற, இலங்கை இராணுவத்தின்  ரிவிரெச நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

1998: நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில், 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.

2003: தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி ஆனது.

2006: ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.

2006: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .