2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 20

Menaka Mookandi   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1803: ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை, பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு, ஒப்புதல் அளித்தது.

1827: ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

1941: கிறகுஜேவாச் படுகொலைகள் - சேர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.

1944: இரண்டாம் உலகப் போர் - சோவியத் இராணுவம் யுகோசுலாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.

1944: கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பேர் கொல்லப்பட்டனர்.

1955: த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது.

1946: புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1973: சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.

1976: மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 பயணிகள் கொல்லப்பட்டனர். 18 பேர் மட்டும் தப்பினர்.

1982: இலங்கையில் முதன் முதலில், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.

1982: மாஸ்கோவில் இடம்பெற்ற பன்னாட்டு கால்ப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.

2001: இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணிக் கட்சி தொடங்கப்பட்டது.

2004: முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.

2011: லிபியத் தலைவர் முஅம்மர் அல் கடாபி, கிளர்ச்சிப் படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .