2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சம்பியனானது மட்டக்களப்பு கோட்டமுனை வி.க

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு கோட்டமுனை, சிவானந்தா ஆகிய விளையாட்டு  கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட, 50 ஓவர்கள் கொண்ட கடினபந்து  கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், கோட்டமுனை விளையாட்டுக் கழகம், சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு, 2016ஆம் ஆண்டுக்கான வெற்றிக் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.

கடந்த பத்து வருடங்களாக, சிவானந்தா விளையாட்டுக் கழகமும் கோட்டைமுனை விளையாட்டுக் கழகமும் சினேகபூர்வமான ஒரு கடினபந்து கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து, வருடந்தோரும் மிகச் சிறப்பாக நடாத்தி வருகின்றது.

இந்தப் பிரபல விளையாட்டு கழகங்களுக்கிடையில், 50  ஓவர்கள் கொண்ட  கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள், இரண்டு நாட்களாக நடத்தப்படுகின்றது. இந்த இரண்டு நாள் போட்டியானது, கடந்த வாரயிறுதி நாட்களில், மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலை மைதானத்தில்   நடைபெற்றது

முதல் நாள் நடைபெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிவானந்தா விளையாட்டுக் கழகம், 43 ஓவர்களில சகல விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோட்டமுனை விளையாட்டுக் கழகம், 26 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கினையடுத்து,  வெற்றி பெற்றது.

இரண்டாம் நாள் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிவானந்தா விளையாட்டு கழகம், முதலில் துடுப்பெடுத்தாடி, 46 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 192  ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 193 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய கோட்டமுனை விளையாட்டு கழகம், 46 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்து, இரண்டாம் நாள் போட்டியிலும் வெற்றிபெற்றது.

இதன் அடிப்படையில், இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற கோட்டமுனை விளையாட்டு கழகம், சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் 2016ஆம் ஆண்டுக்கான வெற்றிக்  கிண்ணத்தையும்  சுவிகரித்துக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .