2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பெண் பொலிஸ் சீருடை அணிந்த இளைஞனுக்கு மறியல்

Gavitha   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பெண் பொலிஸ் சீருடையொன்றை அணிந்திருந்த 21 வயதுடைய இளைஞனை, எதிர்வரும 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (20) உத்தரவிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (19) மாலை, நுவரெலியா நகரத்தில், பெண் பொலிஸ் சீருடையொன்றை அணிந்துக்கொண்டிருந்த இளைஞன் ஒருவரை, நுவரெலியா குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, அவர் கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பில் நீதிமன்றத்தில் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, நேற்று வியாழக்கிழமை (20), இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவருக்கு மேற்படி உத்தரவை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .