2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நரிப்புல் தோட்டத்துக்கு உதவி

Niroshini   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

ஐரோப்பா வாழ் தமிழ் சமூகத்தின் சார்பில், மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நரிப்புல் தோட்டம் கிராம வாழ் பொதுமக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கான நிதியுதவிகள், இன்று வெள்ளிக்கிழமை (21) வழங்கப்பட்டன.

முதல் கட்டமாக 2016 முதல் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த 5 தாய்மார்களுக்குத் தலா ரூபாய் 10,000 வழங்கப்பட்டதுடன், குழந்தைகளுக்கு 18 வயதுவரை மாதந்தோறும் தலா ரூபாய் 1,000 வைப்புச் செய்யும் திட்டமும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சுவிஸ் வாழ் க.துரைநாயம், கோட்டக் கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன், கவிஞர் பாவாணர் அக்கரைப் பாக்கியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .