2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கசிப்பு வடித்தவருக்கு தண்டப்பணம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் காட்டுப்பகுதியில் கசிப்பு வடித்துக்கொண்டிருந்த ஒருவர், கடந்த வியாழக்கிழமை (20) இரவு, மதுவரித்திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, மன்னார் மதுவரித்திணைக்களப் பொறுப்பதிகாரி எஸ்.ரஞ்சன் தலைமையில் மதுவரித் திணைக்கள பணியாளர்கள் மற்றும் வவுனியா மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி செனவிரத்தின ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே மன்னார் காட்டுப்பகுதியில் கசிப்பு காய்ச்சிக்கொண்டிருந்த நிலையில் குறித்த நபர், கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நபரிடம் இருந்து கசிப்பு வடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் வடித்த கசிப்பு ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரை, மன்னார் நீதிமன்றத்தில் நேற்று (21) ஆஜர்படுத்திய போது, சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் 75 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு, நீதவான்
உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .