2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கடற்படை சிப்பாய்கள் மீது தாக்குதல்: அறுவருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

முத்தரிப்புத்துறை கிராமத்திலுள்ள கடற்படை சிப்பாய்கள் இருவர் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமர்று மன்னார் நீதவான் நேற்று வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.

முத்தரிப்புத்துறை கிராமத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீடு ஒன்றுக்குள் நுழைய முற்பட்ட சந்தேக நபரை துரத்திப்பிடித்த கிராம மக்கள், அவரை தாக்கியுள்ளனர். அவர் கடற்படை சிப்பாய் என்று தெரியவந்ததும், கடற்படையினருக்கும் கிராமமக்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டது.

இதேவேளை, அவரை காப்பாற்றுவறத்காக சிவில் உடையில் சென்ற மற்றுமொரு கடற்படை சிப்பாயும் மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இரண்டு கடற்சிப்பாய்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடற்சிப்பாய்களை தாக்கியவர்கள்  தொடர்பில், கடற்படையினர் பொலிஸாருக்கு விவரங்களை வழங்கவே, குறித்த கிராமத்திலுள்ள அறுவரை சிலாபத்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் பெற்ற பின்னர், அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன்போதே, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் 24ஆம் திகதியன்று அடையாள அணிவகுப்புக்கு உற்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X