2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அம்பலவன்பொக்கணை மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்கவும்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, அம்பலவன்பொக்கணை மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்குமாறு இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இப்பகுதியிலுள்ள 500 வரையான குடும்பங்கள் ஏழு கிலோமீற்றர் தூரத்திலுள்ள பிரதேச மருத்துவமனைக்கும் இருபது கிலோமீற்றர் தூரத்திலுள்ள முல்லைத்தீவு மாஞ்சோலை பொது மருத்துவமனைக்கும் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் நாள்தோறும் சென்று வருகின்றனர்.
 
இறுதிப்போர் 2009இல் நடைபெற்று பேரழிவுகளை எதிர்கொண்ட மாத்தளன், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை ஆகிய கிராமங்களின் மக்களின் நலன்கருதி அம்பலவன்பொக்கணை மருத்துவமனைக்கு மருத்துவர் ஒருவரை நியமிப்பதன் மூலம் இப்பகுதி மக்கள் பெரும் பயனடைவார்கள்.

தற்போது மருத்துவமனையில் மகப்பேற்றுப் பெண்கள், குழந்தைகளுக்கான மாதாந்த சிகிச்சைகள் சுகாதாரப் பணிமனையினரால் நடத்தப்பட்டு வருவதாகவும் நிரந்தரமாக இம்மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்கக் கோரி, வடமாகாண சுகாதார அமைச்சருக்கும் வடமாகாண முதலமைச்சருக்கும் மனுக்கள் கையளித்தும் பயன்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X