2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காலம் கடிதென ஓடும்…

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இழப்புக்கள் வரும்போது அது விதி என்று சொல்லிச் சமாதானத்தை தமக்குத் தாமே சொல்வதை ஆற்றாமை என்றுதான் சொல்ல வேண்டும். 

வரவுகளை நாம் சந்தோசத்துடன் ஏற்கின்றோம். இந்த வரவுகள் தங்களது முயற்சியால் ஏற்பட்டது எனத் திருப்திப்படுவார்கள்; ​அதே வேகத்துடனான வேகத்தை இழப்புக்கள் நேரிடும்போது விட்டுவிடக்கூடாது. 

துன்பம் வரும் கால் முடங்குதல் கோழைத்தனத்துடன் இயங்காத ஒரு ஸ்தம்பித நிலை​ உருவாக இடம்கொடுக்கக் கூடாது. இந்த நிலை மிகவும் ஆபத்தானது.

ஊக்கத்துடன் செயலாற்றுபவர்கள் காலநிலை சரியில்லை என எண்ணினால் எதிர்காலம் என்னாவது?

காலம் கடிதென ஓடும்; கழியும் காலத்தில் ஒருவினாடிப் பொழுதும் ஒருவனைக் கோடீஸ்வரனாக்கும். 

வாழ்வியல் தரிசனம் 24/10/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .