2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய சிறுவர்களை கைது செய்ய நடவடிக்கை

Niroshini   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

திம்புளை-பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டப் பகுதியில் 09 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 14 மற்றும் 15 வயது சிறுவர்களை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திம்புளை-பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி தனது தாத்தா மற்றும் பாட்டியின் அரைவணைப்பில் வளர்ந்து வந்துள்ளதாகவும் அருகிலுள்ள வீடொன்றுக்கு மாலை நேர வகுப்புக்கு தினமும் செல்வதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையிலேயே,  குறித்த சிறுமியுடன் கல்வி கற்கும் இரு சிறுவர்களே சிறுமியை  பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .