2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பல்லவராயன்கட்டு வீதி புனரமைப்பு

Niroshini   / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளம், பல்லவராயன்கட்டு வீதியின் 532 மீற்றர் நீளமான பகுதி 2016ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் 6 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

வன்னேரிக்குளம், பல்லவராயன்கட்டு பிரதான வீதியாகக் காணப்படும் குறித்த வீதியானது கடந்த பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாதிருந்தது.

இந்த வீதியைப் பயன்படுத்தும் இப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் இதனைப் புனரமைத்து தருமாறு கோரிக்கைவிடுத்து வந்தனர்.

ஏ-32 பூநகரி மன்னார் பிரதான வீதியுடன் இணைக்கப்படும் மேற்படி வீதியின் 532 மீற்றர் நீளமான வீதி தார் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், மழை நீர் குறுக்கறுத்துப்பாயும் இரு இடங்களில் இரு மதகுகளும் அமைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .