2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருவிழா

Niroshini   / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு - வாவிக்கரை இரண்டு மருதடி வீதியில் உள்ள புனித அந்தோனியார் சிற்றாலயத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருவிழா விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

குறித்த வீதியில் உள்ள இந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

திங்கட்கிழமை(24) மாலை அருட்தந்தை நிக்சன் ஜுட் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது திருச்சொரூபம் பவனி நடைபெற்றதுடன் அடியார்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .