2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

25 வர்த்தக நிலையங்களில் சோதனை

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனைப் பிரதேசங்களிலுள்ள 25 வர்த்தக நிலையங்களில் நேற்றுப் புதன்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது, நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும்  அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

நுகர்வுக்குப் பொருத்தமில்லாமல் விற்பனைக்காக உணவுப் பொருட்களை வைத்திருந்த  வர்த்தக உரிமையாளர்களை எச்சரித்துள்ளதுடன், கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களை அழித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .