Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
George / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா வள்ளிகோட்டம் சிதம்பரபுரத்தை சேர்ந்த நடராஜா நயனகுமார் (சூட்டி மாத்தையா) என்ற 17 வயதுடைய சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் திகதி, அயல் வீட்டாருடன் பழைய டயர்களை கொள்வனவு செய்வதற்காக வாகனமொன்றில் சென்ற இச் சிறுவனை 11.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து, வவுனியா நோக்கி வந்த தனியார் பஸ்ஸில், வவுனியா நோக்கி செல்வதற்கு, கூட்டிச் சென்றவர்கள் ஏற்றி விட்டதாகவும் எனினும், குறித்த சிறுவன் வவுனியா நகரை வந்தடையவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
கோமரசன்குளம் பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த சிறுவன், தாய், தந்தை இல்லாத நிலையில் அம்மம்மாவுடன் தங்கி கல்விகற்று வந்ததாக உறவினர்கள்தெரிவிக்கின்றனர்.
குறித்த, சிறுவனை யாராவது கண்டால், 0772923135, 0778923272 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கோரிக்கைவிடுத்து, வவுனியா நகரில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .