2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கலர்கலராய் வந்த எம்.பி வெளியேறினார்

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவைக்குப் பொருத்தமில்லாத வர்ணங்களைக் கொண்ட ஆடையணிந்து வந்த ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட எம்.பியான அ.அரவிந்தகுமார், அவைக்குள்  நுழைந்த சில நிமிடங்களிலேயே அவையிலிருந்து வெளியேறிவிட்டார்.   

நாடாளுமன்றம், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது.   வாய்மூல வினாக்கான கேள்வி நேரத்தின் போதே, அவர் அவைக்குள் பிரவேசித்தார்.  

செவ்விளநீர் நிறத்திலான சேட்டும், கறுப்பு நிறத்திலான சாரத்தையும் அணிந்திருந்தார். இதனை அவதானித்த சபையில் இருந்த உதவியாளர் ஒருவர், அது தொடர்பில், எம்.பிக்கு தெளிவுபடுத்தினார்.   இதனையடுத்தே, அவர், அவையை விட்டு வெளியேறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .