2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க'

Kogilavani   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

'ஒளியின் பெருவிழாவான தீபாவளி திருநாளைக் கொண்டாடும் இந்துசமய சகோதரர்கள் அனைவருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம்' என யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, தனது தீபாவளி வாழ்த்துச் செய்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'குடும்ப உறவுகளிலும் நட்பு வட்டங்களிலும் நடைபெறும் கொண்டாட்டங்கள் எப்போதும் மகிழ்வானவை.  அன்பையும் உறவையும் வளர்ப்பவை.  இந்த வகையில், இப்பெருவிழா உங்கள் குடும்ப மற்றும் நட்பு உறவுகளைப் புனிதப்படுத்தி புதியதாக்கி அன்பையும் புரிந்துணர்வையும் எதிர்கால நம்பிக்கையையும் தரும் ஒரு விழாவாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்.

இருளைப் பழிப்பதை விட ஒளியை எற்றுவதே சிறந்தது என்று கூறப்படுவதை  நாம் அறிவோம்.  ஒளியை எல்லோரும் விரும்புகிறார்கள். இருளைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள். இருளுக்கும் ஒளிக்குமான போராட்டத்தில், ஒளியே வெல்ல வேண்டும். நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் நன்மையே வெல்ல வேண்டும்.

இருள் நிறைந்த துன்பமான வேதனை மிக்க வாழ்வை விடுத்து, ஒளிமிகுந்த மகிழ்ச்சியான  வாழ்வையே எல்லோரும் ஆசிக்கவேண்டும். இதையே நற்செய்தி ஏடுகள் பின்வருமாறு தெரிவிக்கின்றன.

'நீங்கள் உலகுக்கு ஒளியாய் இருக்கிறீர்கள்... எவரும் விளக்ககை ஏற்றி  மரக்காலுக்குள் வைப்பதில்லை மாறாக விளக்குத்தண்டின் மீதே வைப்பர். அப்போதுதான் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள்  உங்கள் நற்செயல்களைக்கண்டு உங்கள் விண்ணக தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்'.

இந்த ஒளியின் விழாவில் நாம் ஒளியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவே அழைக்கப்படுகிறோம். வாழ்வில் நம்பிக்கை இன்றி விரக்தியில் இருப்போர்,    உறவுகளால் கைவிடப்பட்டு வீடுகளிலும் வயோதிப இல்லங்களிலும் தனிமையில் வாடுவோர், வைத்தியசாலைகளிலும் வீடுகளிலும் வருத்தத்தில் இருப்போர், சிறையிலும் தடுப்பு முகாம்களிலும்  அல்லற்படுவோர், அடுத்த நேர உணவு என்ன - யார் எமக்குத் துணை என ஏங்குவோர் -  தாம் புரியப்படவில்லை தம் எண்ணங்கள் ஏற்கப்படவில்லை என ஏங்குவோர் இவர்களே இன்று இருளில் இருப்பவர்கள்.

இவர்களுடைய வாழ்வில் ஒரு தரிசிப்பால் - ஒரு அன்பான வார்த்தையால் - அமைதியான செவிமடுத்தலால் - ஒரு நம்பிக்கையூட்டும் செயலால் -  சிறிய அன்பளிப்பால்,   நேர உணவால் ஒளியைக்காட்ட முடியுமாயின் அதுவே நாம் கொண்டாடும் சிறந்த தீபாவளிப்பெருவிழாவாகும். 'உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க' என்ற வார்த்தைகளை நம்முடையதாக்குவோம்' என்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X