2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கரடியை சாட்சியாக வைத்து திருமணம்

George   / 2016 நவம்பர் 03 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் தொற்றிக்கொண்டு வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த  ஜோடி ஒன்று தற்போது  இந்தப்பட்டியலில் இணைந்துள்ளது.

மொஸ்கோ நகரத்தை சேர்ந்த டெனிஸ், நிலியா ஜோடி வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஸ்டீபன் என்ற கரடியை தங்கள் திருமணத்துக்கு அழைத்து,  அதன் முன்னிலையில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இயற்கையான சூழலுக்கு மத்தியில், பூங்கொத்துகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட தோரணத்தின் நடுவில் ஸ்டீபனை சாட்சியாக வைத்து டெனிஸ், நிலியா மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

3 மாதங்களில்  தனது தாயை இழந்து காட்டில் பரிதவித்த ஸ்டீபனை ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்வெட்லானா-யூரி, என்ற  தம்பதியர் தத்தெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .