2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சடலத்தின் எச்சங்கள் மீட்பு

Niroshini   / 2016 நவம்பர் 26 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் 2ஆம் கட்டை மதுரகம பிரதேசத்தின் காட்டுப்பகுதியிலிருந்து, நேற்று வெள்ளிக்கிழமை சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

பொலிஸ் அவச பிரிவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், ஸ்தலத்துக்கு விரைந்த புத்தளம் பொலிஸார், குறித்த சடலத்தின் எச்சங்களை மீட்டுள்ளனர்.

குறித்த சடலத்தின் எச்சங்கள் அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்துள்ளதாகத் தெரிவித்த புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .