2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘புலிக்கொடியுடன் பரிகசித்தனர்’

Kogilavani   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

“மாவீரர் தினத்தன்று, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், புலிக்கொடிகளுடன் மோட்டார் சைக்கிள்களில், இராணுவ முகாம்களுக்கு முன்பாக வந்து, இராணுவத்தை நோக்கி பரிகசித்தனர்” என்று, ஒன்றிணைந்த எதிரணி, நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.  

தேசிய கலந்துரையாடல்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுகள் மீதான  குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவ்வணியின் உறுப்பினரான விமலவீர திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.  எனினும், இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்த, தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன், “நீங்கள் கூறுவதுபோல அங்கொன்றும் மாவீரர் தினத்தன்று இடம்பெறவில்லை” என்று பதிலளித்தார்.   

“ஆ... அப்படியா?” என்று கேட்ட விமலவீர திசாநாயக்க, “அப்படியெதுவும் நடக்கவில்லை என்றால் சந்தோஷம்தான், ஆனால், தொலைக்காட்சியில் காட்டினார்களே! அதை பார்துதான் நான் கூறினேன்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .