2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தாக்குதலில் இளைஞன் பலி: சந்தேகநபர் தப்பியோட்டம்

George   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிபில பிரதேசத்தில் நபரொருவர், இரண்டு நபர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர், காயமடைந்த நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சம்பத் சந்தருவன் என்ற இளைஞனே மரணமடைந்துள்ளார்.

சடலம், பிபில வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர், பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிபில பொலிஸார்; கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .