Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2017 ஜனவரி 09 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே.கண்ணன்
புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் ஏ பிரிவினருக்கான தொடரில், ஆவரங்கால் இந்து இளைஞர் அணி, சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.
குறித்த கழக மைதானத்தில், மின்னொளியில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்தி அணி மோதியது. 1ஆவது செற்றில் ஆவரங்கால் மத்தி அணி 25-21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, 2ஆவது செற்றில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 25-17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழிதீர்த்தனர்.
மூன்றாவது செற்றில் ஆவரங்கால் மத்தி அணி 25-19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, தாமும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக ஆவரங்கால் இந்து இளைஞர் அணி, 4ஆவது செற்றில் 25-15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுப் பதிலடி கொடுத்தனர்.
வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கும் 5ஆவது செற்களில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 15-11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. போட்டியின் நாயகனாக, ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை சேர்ந்த பழனி தெரிவு செய்யப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .