2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இதுவரை 8637 ஹெட்டேயர் நெற்செய்கை அழிவு

Gavitha   / 2017 ஜனவரி 17 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 8637 ஹெட்டேயர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் 23,466 ஹெட்டேயர் நில நெற்செய்கையும், 926 ஹெட்டேயர் மேட்டு நில நெற்செய்கையும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தற்போது நிலவும் வரட்சி காரணமாக இதுவரை 8470 ஹெட்டேயர் நெற்செய்கையும், 167 ஹெட்டேயர் மேட்டு நில நெற்செய்கையும்  அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வரட்சி தொடருமாயின் முற்றாக நெற்செய்கை அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X