2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கேள்விக்கேற்ற நிரம்பல் இல்லை’

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சந்தையில் இலங்கையின் மீன் மற்றும் மீன் உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுகின்ற போதிலும் அவற்றை நிரம்பல் செய்வதில் தோல்வியடைந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர்  மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சர்வதேச சந்தையில் இலங்கையின் மீன் மற்றும் மீன் உற்பத்திகளுக்கு நிலவும் கேள்விகளில் மூன்றில் ஒரு பங்கே நிரம்பல் செய்யப்படுகிறது.
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் மீன் மற்றும் மீன் உற்பத்தி ஏற்றுமதிகள் 2016ஆம் ஆண்டில் சிறியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் மீன் ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் அதிகரித்துள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X