2024 மார்ச் 28, வியாழக்கிழமை

காதலனுடன் முரண்பட்டு வாவிக்குள் குதித்தார் காதலி

Kogilavani   / 2017 ஜனவரி 17 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

கண்டி வாவியில் படகுச் சவாரி செய்துகொண்டிருந்தபோது, வாவிக்குள் குதித்த, கேகாலை, பரம்மான பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான யுவதி, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி யுவதி, தனது காதலனுடன் கண்டி, வாவியில் படகுச் சவாரி மேற்கொண்டுள்ளார். இதன்போது, இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையிலேயே குளத்தில் குதித்துள்ளார்.

யுவதியின் காதலனும், படகை ஓட்டிச் சென்றவரும் யுவதியை மீட்டு, கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். முன்னாள் காதலுடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுவிட்டதாக காதலன் கூறியதையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X