2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கையை வைத்தவர் சிக்கினார்: மோப்ப நாயின் உதவியுடன் கைது

Kogilavani   / 2017 ஜனவரி 17 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, எஸ்.கணேசன்

பூண்டுலோயா, நியகங்தொர பிரதேசத்தில் வைத்தியரொருவருக்கு உரித்தான களஞ்சியசாலையில் பொருட்களை திருடியதாகக் கூறப்படும் நபரொருவரை, மோப்ப நாயின் உதவியுடன் பூண்டுலோயா பொலிஸார் இன்று (17) கைதுசெய்துள்ளதுடன், அந்நபர் திருடிய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி வைத்தியர், கட்டடமொன்றை நிர்மாணித்து வருவதுடன், அக்கட்டிடத்துக்கான கட்டுமானப் பொருட்களையே களஞ்சியப்படுத்தப்படுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை, கட்டிடப் பணியாளர்கள் வேலை முடிந்துச் சென்றதன் பின்னர், மேற்படி நபர் களஞ்சியசாலைக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

இச்சம்பம் தொடர்பில் வைத்தியர், பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் அந்நபரை கைதுசெய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .