2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாணவர்கள் உட்பட ஐவர் படுகாயம்

George   / 2017 ஜனவரி 17 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில், மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து, இன்று மாலை விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மாணவர்கள் ஐவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாந்தபுரம் பகுதியில் இருந்து கனகாம்பிகை குளத்துக்கு மாணவர்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.படுகாயங்களுக்குள்ளான மாணவர்கள் இருவர், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X