2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தடைச் செய்யப்பட்ட மீன்பிடி முறைமைக்கு தடை

Gavitha   / 2017 ஜனவரி 18 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், தடைச் செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி, மீன்பிடியில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த அனைத்துச் செயற்பாடுகளுக்கும் நேற்று முதல், தடை விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில், கட்டுவலை, சுருக்குவலை உள்ளிட்ட பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளைப் பயன்படுத்தி, மீனவர்கள் தொடர்ச்சியாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறமைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க,  மன்னார் கடற்தொழில் திணைக்களம், 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியிருந்தனர்.இந்நிலையிலேயே நேற்று முதல், இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறு இந்தத்தடை​ மீறப்படுமானால், மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

எனினும், தமக்கு மேலும் அவகாசம் வழங்கினால், தாங்கள் மாற்றுத்தொழிலை கையால முடியும் என்று, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரியிடம் வினவியபோது,

“மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தச் செயற்பாடுகளுக்கு, 15ஆம் திகதி வரை கால அவகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, கடற்படையினரால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .