2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்றில் இளைஞர் மாநாடு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 19 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான இளைஞர் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அக்கரைப்பற்று பொதுப்பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் அக்கரைப்பற்றுப் பிரதேச இளைஞர் அமைப்பாளர் ஐ.எச்.ஏ.வஹாப் தெரிவித்தார்.

மேற்படி கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்கா உட்பட  கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.  

மேலும் 500 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொத்துவில் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மேம்படுத்துவது மற்றும்;; எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இம்மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .